நடிகை பிரியா
சமீப காலமாக பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் இளம் வயதினர் பலர் அதிகம் மாரடைப்பால் உயிரிழந்ததாக வெளியாகும் தகவல், கேட்பவர்கள் நெஞ்சங்களையே பதற வைக்கிறது. அதே போல் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பல எதிர்பாராத மரணங்கள் ஏற்பட்டு வருவதை பார்க்க முடிகிறது.
அந்த வகையில் தற்போது, மலையாளத்தில் ஒளிபரப்பான ‘கருத்த முத்து’ சீரியலில் நடித்து பிரபலமான… ப்ரியா எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவர் ஒரு மருத்துவர் ஆவர். 35 வயதாகும் ப்ரியா, பெங்களூருவை சேர்ந்த சரவணன் என்பவரை சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னர், சின்னத்திரையில் இருந்து விலகி, கணவரின் ஆசை படி MD படித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ப்ரியா நேற்று வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்று விட்டு வந்துள்ளார். அதன் பிறகு நன்றாக இருந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
ரசிகர்கள் கண்ணீர்
பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டாராம் பிரியா . மேலும் அவசர அவசரமாக அவருடைய குழந்தையை மருத்துவர்கள் அறிவை சிகிச்சை செய்து ஐ சி யு வில் வைத்துள்ளார்களாம் . குறிப்பாக ஒரு மருத்துவராக,
இருந்த பிரியாவுக்கு மாரடைப்பு ஏற்பட என்ன காரணம் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர் . இதற்கும் பிரியாவுக்கு வெறும் 35 வயது தான் என்பது குறிப்பிடத்தக்கது . இதைப் பார்த்த ரசிகர்கள் நடிகை பிரியாவுக்கு தங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.