பிரகதி மகாவடி
தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் நடிகை பிரகதி. தற்பொழுது சீரியல்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகின்றார். சமீபத்தில் அரண்மனைக்கிளி என்ற சீரியலில் ஹீரோவுக்கு அம்மாவாக நடித்திருந்தார்.
சில படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருந்தாலும் இன்றைக்கும் ஹீரோயின் போல் கச்சிதமாக கும்முன்னுதான் இருக்கிறார். சில காமெடி நடிகர்கள் கூட இவருடன் ஜோடி சேர வேண்டும் என்ற ஆசையில்தான் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தற்போது ஏறக்குறைய 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இவரை பின்தொடர்ந்து வரும் நிலையில் தற்போது இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ளார். நடனம் மற்றும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டும் இவர் அன்றாடம் உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
47 வயதில் மறுமணம்..
20 வயதிலேயே திருமணம் செய்த இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.ஒரு கட்டத்தில் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். அண்மையில் இவர் மறுமணம் செய்துகொள்ள போகிறார் என்ற செய்தி வைரலானது.
47 வயதில் பிரகதிக்கு திருமணம் என செய்தி வெளியிட்ட தெலுங்கு மீடியாவை தனது இன்ஸ்டா கடுமையாக திட்டியுள்ளார். மறுமணம் பற்றி யோசிக்க கூட இல்லை, இத்தனை ஆண்டுகள் தனியாக வாழ்ந்து விட்டேன், பொறுப்புட்ன் செய்தி வெளியிடுங்கள் என கூறியுள்ளார்.