ஸ்ரீ திவ்யா
தெலுங்கு சினிமாவில் 2000 ஆம் ஆண்டு வெளியான ஹனுமான் ஜங்ஸன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய அடுத்தடுத்த தெலுங்கு படங்களில் நடித்து வந்தார் ஸ்ரீதிவ்யா. அதன்பின் மனசாரா என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிய ஸ்ரீதிவ்யா, தமிழில் வருத்தபடாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.
ஊத கலர் ரிப்பன் நடிகை என்ற பெயரெடுத்த ஸ்ரீதிவ்யா, ஜீவா, வெள்ளைக்கார துறை, காக்கி சட்டை, ஈட்டி, பென்சில், மருது, காஸ்மோரா, சங்கிலி புங்கிலி கதவ தொர போன்ற படங்களில் நடித்து வந்தார். இதற்கிடையில் பிரபலம் கொடுத்த பார்ட்டி ஒன்றில் தலைக்கேரிய போதையில் ஆட்டம் போட்டு தன் பெயரை கெடுத்துக்கொண்டதாக சினிமா விமர்சகர்கள் கூறி பரப்பரப்பை ஏற்படுத்தி வந்தனர்.
இதனால் தான் கடந்த 5 ஆண்டுகளாக தமிழில் வாய்ப்பில்லாமல் இருந்து வந்தார். சமீபத்தில் மலையாளத்தில் பிரித்திவிராஜ் சுகுமாரன் நடிப்பில் ஜன கன மன படத்தில் நடித்து ரீஎண்ட்ரி கொடுத்தார்.
அறிவிப்பு
இதனால் கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக வீட்டிலேயே முடங்கி இருந்த நடிகை ஸ்ரீதிவ்யா தற்போது தமிழில் இரண்டு திரைப்படங்கள் கைவசம் வைத்திருக்கிறாராம் . இப்படி இருக்கும் நிலையில் முப்பது வயதாகும் ஸ்ரீதிவ்யா தன்னுடைய திருமணம் குறித்து மனம் திறந்து உள்ளார்.
அந்த வகையில் பேட்டி ஒன்றில் பேசிய ஸ்ரீ திவ்யாவிடம் உங்களுக்கு எப்போது திருமணம் .? அது காதல் திருமணமா? இல்லை பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமா .? என்று கேள்வி எழுப்பியுள்ளனர் . அதற்கு பதில் அளித்த ஸ்ரீ திவ்யா , என்னுடைய திருமணம் கண்டிப்பாக
காதல் திருமணமாகத்தான் இருக்கும். நான் என்னுடைய காதலனை தான் திருமணம் செய்ய போகிறேன் , விரைவில் இது குறித்து அறிவிப்பேன் என்று கூறியிருந்தார் . இதைப் பார்த்த ரசிகர்கள் யார் அந்த அதிர்ஷ்டசாலி என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.