சம்யுக்தா ஹெக்டே
கன்னட திரையுலகின் பிரபலமான நடிகைகள் பெரும்பாலும் தமிழ் மொழியிலும் நடிக்க வருகிறார்கள். தற்போது அங்கு முன்னணி கதாநாயகியாக இருக்கும் சம்யுக்தா ஹெக்டே, தற்போது ‘பப்பி’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் பட உலகுக்கு அறிமுகம் ஆகிறார்.
இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக வருண் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் போகன், நெருப்புடா, நைட் ஷோ ஆகிய படங்களில் நடித்தவர், இவர். வருண்-சம்யுக்தா ஹெக்டேயுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மேலும் முக்கிய காதாபாத்திரத்தில் ஒரு “நாய்” நடித்து வருகிறது. இந்த படத்தை இயக்குனர் நட்டுதேவ் இயக்கி வருகிறார்.
இதற்கு முன்னர் நடிகை சம்யுக்தா ஹெக்டே நடித்த ‘கிரிக் பார்ட்டி’ என்ற கன்னட படத்தில், துறு துறு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். ‘பப்பி’ படத்தில் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து இழுக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
வெளிப்படை
நடிகை சம்யுக்தாவிடம் சமீபத்தில் பேட்டியில் கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது. அதில் உடலுறவு அல்லது நடிப்பு இந்த இரண்டில் ஏதாவது ஒன்றைத்தான் நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். ஏதாவது ஒன்றை விட்டு விட வேண்டும். அப்படி என்றால் எதனை விட்டு விடுவீர்கள். அதற்கான காரணம் என்ன..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த சம்யுக்தா, உடலுறவை நான் விட்டு விடுவேன். ஏனென்றால் உடலுறவு என்னுடைய கட்டணங்களை செலுத்த போவதில்லை.
தொலைபேசி கட்டணம் காரின் பெட்ரோல் செலவு என்னுடைய வீட்டு செலவுகளை உடலுறவு தீர்த்து வைக்காது. நடிப்பு எனக்கு நல்ல வருமானத்தை கொடுக்கிறது. எனவே கண்டிப்பாக நடிப்பை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன். எனவே, உடலுறவை இந்த இடத்தில் என்னால் விட்டுக்கொடுத்துவிட முடியும் என்று பேசி இருக்கிறார் நடிகை சம்யுக்தா.