லலிதா குமாரி
தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை லலிதா குமாரி. இவர் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தின் மூலம் தான் திரையுலகில் முதன் முதலாக அறிமுகமானார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து வீடு மனைவி மக்கள், புது புது அர்த்தங்கள், புலன் விசாரணை, உலகம் பிறந்தது எனக்காக, போன்றத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவ்வாறு தன்னுடைய வாழ்வில் இதுவரை 35 திரைப்படங்களுக்கும் மேலாக நடித்துள்ள லலிதாகுமாரி நடிகர் ஆனந்தனின் மகள் என்பது பலருக்கும் தெரியாத விஷயம் தான் அதுமட்டுமில்லாமல் நடிகை டிஸ்கோ சாந்தியின் தங்கை இவர்தான் என்பது குறிப்பிடதக்கது.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை 1994 ஆம் ஆண்டு நடிகர் பிரகாஷ்ராஜ் திருமணம் செய்து கொண்டார். இவர் தன்னுடைய திருமணத்திற்கு பிறகு பூஜா, மேக்னா ஆகிய இரண்டு மகள்களை பெற்றெடுத்த நமது நடிகை அதன் பின்னர் ஒரு மகனுக்கும் தாயானார். பின்னர் அவருடைய மகன் சித்து 2004 ஆம் ஆண்டு காலமாகிவிட்டார்.
இவ்வாறு தன்னுடைய மகனின் மறைவிற்குப் பிறகு ஆக பிரகாஷ்ராஜுக்கும் லலிதா குமாரிக்கும் இடையே ஏகப்பட்ட பஞ்சாயத்து ஏற்பட்டது இதன் விளைவாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட இவர்களுடைய திருமணம் விவாகரத்தில் முடிவடைந்துவிட்டது பின்னர் லலிதாகுமாரி சினிமாவை விட்டுவிட்டு தன்னுடைய குடும்பத்தை பார்க்க ஆரம்பித்துவிட்டார்.
புகைப்படம்
2010ஆம் ஆண்டு போனி வர்மா என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சமீபத்தில் கூட இவருடைய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் லலிதாகுமாரியா இது என அனைவரும் ஆச்சரியத்தில் உள்ளார்கள்