வாய்தா பட நடிகை
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகை பவுலின் ஜெசிகா என்கிற தீபா. 29 வயதாகும் இவர் அறிமுக இயக்குநர் மகிவர்மன் இயக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரனின் மகன் புகழ் மகேந்திரன் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் ‘வாய்தா’. இந்தப்படத்தில் நடிகை தீபா என்கிற பவுலின் ஜெஸ்ஸிகா நாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு முன்னதாக அவர் விஷாலின் ‘துப்பறிவாளன்’ படத்தின் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சென்னை விருகம்பாக்கம் மல்லிகை அவென்யூவில் வாடகை வீட்டில் தங்கியிருந்தார் பவுலின் தீபா. இவர் கடந்த சில ஆண்டுகளாக சிராஜுதீன் என்பவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 17ம் தேதி நடிகை தீபா தனது வீட்டில் கடிதம் எழுதிவைத்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரணத்தை புட்டுபுட்டி வைத்த பயில்வான் ரங்கநாதன்
நடிகையின் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், சிராஜுதினுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பது தெரிந்து தீபா அவருடன் காதலில் இருந்துள்ளார். தீபாவுக்கு சினிமா வாய்ப்பு வாங்கி கொடுத்த நண்பர் பிரபாகரன் பற்றியும் எந்தவொரு தடையமும் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார் பயில்வான். ஆந்திராவில் இருக்கும் தீபாவின் பெற்றோர்கள் கூட தன் மகள் தற்கொலை குறித்து சிராஜுதின் மீதோ பிரபாகரன் மீதோ எந்தவொரு புகாரும் அளிக்காமல் இருந்துள்ளனர். இப்படி சினிமா வாய்ப்புக்காக சொந்த ஊரைவிட்டு இங்கு வந்து இளம் நடிகைகள் காதலில் விழுந்து சீரழிந்து போகிறார்கள் என்றும் பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் பகிர்ந்துள்ளார்.